நம்பிக்கையாளர்கள், நம்பிக்கையாளர்களைத் தவிர நிராகரிப்பாளர்களை (தங்களது) பாதுகாவலர்களாக (உதவியாளர்களாக) எடுத்துக்கொள்ள வேண்டாம். எவர் இதைச் செய்வாரோ அவர் அல்லாஹ்வை விட்டும் நீங்கிவிட்டார். (அல்லாஹ்வும் அவரை விட்டு நீங்கிவிட்டான். இன்னும் அவர் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு நீங்கியவர் ஆவார்.) நீங்கள் (அவர்களின் ஆதிக்கத்தில் இருந்து, அவர்கள் பெரும்பான்மையாக இருந்து) அவர்களை அதிகம் அஞ்சினால் தவிர. (அப்போது மார்க்க விஷயத்தில் அவர்களுக்கு கீழ்ப்படியாமல், உலக விஷயத்தில் அவர்களுடன் மென்மையாக நடப்பது உங்கள் மீது குற்றமில்லை). இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கிறான். அல்லாஹ்வின் பக்கம்தான் மீளுமிடம் இருக்கிறது.